பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 340 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் கூட்டமாக நடக்கும் இறுதிச் சடங்குகள், மீட்பு ஹெலிகாப்டரின் விபத்து என அசாதாரண சூழலால் ஸ்தம்பித்துள்ள பாகிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழையாலும், மேக வெடிப்பாலும், கைபர் பக்துன்க்வா மாகாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இந்த கனமழை, வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, 340 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பியூனர் மாவட்டத்தில் மட்டும் 207 பேர் உயிரிழந்துள்ளனர். அதே மாகாணத்தில் உள்ள புனேர் மாவட்டத்தில் 10 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்துள்ளதும், 184 பேர் வரை உயிரிழந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது தவிர, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பேரும், கில்ஜித் பல்டிஸ்தானில் 5 பேரும் பேரிடரில் சிக்கிப் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

வீடுகள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், மாயமான பலரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், பிற மீட்பு அமைப்புகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளுக்காக முடுக்கி விடப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுவாட், பஜாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்வதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த, ஹெலிகாப்டர் ஒன்றும் எதிர்பாராத விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த, விமானி உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தது அந்நாட்டின் நிலையை மேலும் துயரமாக்கியுள்ளது.

அதே வேளையில், பாகிஸ்தானின் வட-மேற்கு பகுதிகளில் கனமழை தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், பாகிஸ்தானில் நிலைமை மேலும் மோசமடைந்து உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags: pakistan floodpakistan news todayFloods ravage Pakistan: More than 300 people killed in 48 hours..!
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

Next Post

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies