தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் "பல்டி" - விசாரணையில் திருப்பம்!
Aug 19, 2025, 09:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

Web Desk by Web Desk
Aug 19, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்து நூற்றுக்கும் அதிகமான பெண்களின் உடல்களை தர்மஸ்தலா நேத்ரவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த நபர் தற்போது அதனை மறுத்திருப்பதால் பூகம்பம் கிளம்பியுள்ளது. கர்நாடகா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய புகார்தாரரின் வாக்குமூலம் குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் சதித்திட்டம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலில் 1995 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தூய்மைப் பணியாளராக பணியாற்றிவந்த ஒருவர், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்களின் உடலை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக அளித்த வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2012க்கு பின் வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாகவும், புதைக்கப்பட்ட பெண்கள் தன்னுடைய கனவில் வந்ததாலும், மனசாட்சி உறுத்தியதாலும் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் கூறிய அந்த நபர், சில எலும்புக் கூடுகளையும், மண்டை ஓடுகளையும் பெல்தங்கடி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

கர்நாடகா மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அழுத்தம் எழுந்த நிலையில் அதற்கான உத்தரவைக் கர்நாடக மாநில அரசு பிறப்பித்தது.

மஞ்சுநாதா கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நேத்ரவதி ஆற்றங்கரையோரம் புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டது. மொத்தமாக 13 இடங்களைத் தோண்டி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சில எலும்புக் கூடுகளும் மண்டை ஓடுகளும் கிடைத்தன.

விசாரணையைத் தீவிரப்படுத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தன் கவனத்தைப் புகார் தாரரின் பக்கம் திருப்பியது. புகார்தாரரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது.

தர்மஸ்தலாவில் பணியாற்றிய பின்பு சென்னைக்கு வந்த புகார்தாரரை, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்தித்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, அங்கு வேலை செய்த போது சட்டவிரோதமாக உடல்களைப் புதைத்ததாக வாக்குமூலம் அளிக்குமாறு மிரட்டியுள்ளனர்.

தர்மஸ்தலா புனிதத் தலம் என்பதால் அங்கு வந்து உயிரிழந்தால் மோட்சம் கிடைக்கும் என்பதால் சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களின் உடல்களைச் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டுப் புதைத்ததாகப் புகார்தாரர் விளக்கிய பின்பும், சட்டவிரோதமாகவே புதைத்ததாக வாக்குமூலம் அளிக்க வேண்டும் என அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

அதோடு, காவல்துறையிடம் சென்று என்ன சொல்ல வேண்டும், நீதிமன்றத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பது வரை புகார்தாரருக்கு அக்கும்பல் பயிற்சி அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பித்த எலும்புக் கூடுகளும், மண்டை ஓடுகளும் அடையாளம் தெரியாத கும்பல் கொடுத்தவை தான் என்பதும், புகார் அளித்தவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் பொய் புகார் அளித்த நபரைக் குற்றவாளியாகக் கருதி அவர் மீதான நடவடிக்கையைச் சிறப்புப் புலனாய்வுக் குழு தொடங்கியுள்ளது. புகார் தாரரை மிரட்டியதாகக் கூறப்படும் அந்த அடையாளம் தெரியாத கும்பல் யார்?, புகார் தாரர் அளித்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை எந்தளவிற்கு இருக்கிறது என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைச் சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரப்படுத்தியுள்ளது.

Tags: தர்மஸ்தலா கோவில்கர்நாடக மாநிலம்Attempt to defame Dharmasthala temple: "Baldi" claims to have buried the bodies - twist in investigation
ShareTweetSendShare
Previous Post

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

Next Post

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Load More

அண்மைச் செய்திகள்

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies