தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் "பல்டி" - விசாரணையில் திருப்பம்!
Oct 6, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

Web Desk by Web Desk
Aug 21, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்து நூற்றுக்கும் அதிகமான பெண்களின் உடல்களை தர்மஸ்தலா நேத்ரவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த நபர் தற்போது அதனை மறுத்திருப்பதால் பூகம்பம் கிளம்பியுள்ளது. கர்நாடகா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய புகார்தாரரின் வாக்குமூலம் குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் சதித்திட்டம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலில் 1995 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தூய்மைப் பணியாளராக பணியாற்றிவந்த ஒருவர், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்களின் உடலை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக அளித்த வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2012க்கு பின் வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாகவும், புதைக்கப்பட்ட பெண்கள் தன்னுடைய கனவில் வந்ததாலும், மனசாட்சி உறுத்தியதாலும் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் கூறிய அந்த நபர், சில எலும்புக் கூடுகளையும், மண்டை ஓடுகளையும் பெல்தங்கடி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

கர்நாடகா மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அழுத்தம் எழுந்த நிலையில் அதற்கான உத்தரவைக் கர்நாடக மாநில அரசு பிறப்பித்தது.

மஞ்சுநாதா கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நேத்ரவதி ஆற்றங்கரையோரம் புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டது. மொத்தமாக 13 இடங்களைத் தோண்டி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சில எலும்புக் கூடுகளும் மண்டை ஓடுகளும் கிடைத்தன.

விசாரணையைத் தீவிரப்படுத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தன் கவனத்தைப் புகார் தாரரின் பக்கம் திருப்பியது. புகார்தாரரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது.

தர்மஸ்தலாவில் பணியாற்றிய பின்பு சென்னைக்கு வந்த புகார்தாரரை, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்தித்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, அங்கு வேலை செய்த போது சட்டவிரோதமாக உடல்களைப் புதைத்ததாக வாக்குமூலம் அளிக்குமாறு மிரட்டியுள்ளனர்.

தர்மஸ்தலா புனிதத் தலம் என்பதால் அங்கு வந்து உயிரிழந்தால் மோட்சம் கிடைக்கும் என்பதால் சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களின் உடல்களைச் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டுப் புதைத்ததாகப் புகார்தாரர் விளக்கிய பின்பும், சட்டவிரோதமாகவே புதைத்ததாக வாக்குமூலம் அளிக்க வேண்டும் என அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

அதோடு, காவல்துறையிடம் சென்று என்ன சொல்ல வேண்டும், நீதிமன்றத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பது வரை புகார்தாரருக்கு அக்கும்பல் பயிற்சி அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பித்த எலும்புக் கூடுகளும், மண்டை ஓடுகளும் அடையாளம் தெரியாத கும்பல் கொடுத்தவை தான் என்பதும், புகார் அளித்தவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் பொய் புகார் அளித்த நபரைக் குற்றவாளியாகக் கருதி அவர் மீதான நடவடிக்கையைச் சிறப்புப் புலனாய்வுக் குழு தொடங்கியுள்ளது. புகார் தாரரை மிரட்டியதாகக் கூறப்படும் அந்த அடையாளம் தெரியாத கும்பல் யார்?, புகார் தாரர் அளித்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை எந்தளவிற்கு இருக்கிறது என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைச் சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரப்படுத்தியுள்ளது.

Tags: கர்நாடக மாநிலம்Attempt to defame Dharmasthala temple: "Baldi" claims to have buried the bodies - twist in investigationதர்மஸ்தலா கோவில்
ShareTweetSendShare
Previous Post

தொடர்ந்து 3 முறை 400 கோடி ரூபாய் வசூலித்த படங்களை கொடுத்த இயக்குனர் பட்டியலில் லோகேஷ் கனகராஜ்!

Next Post

சி.பி.ஆர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி

Related News

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies