ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்றது.
அதன்படி ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில், அன்மோல், ஆதித்யா மல்ரா, சவுரப் சவுத்ரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி ஆயிரத்து 735 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.