டைமண்ட் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.
உலக தடகள கூட்டமைப்பு சார்பில் டைமண்ட் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதன் 16வது சீசன் தற்போது நடக்கிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2021ல் தங்கம், 2024ல் வெள்ளி வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2025-ல் இரு தொடரில் மட்டும் பங்கேற்றார்.
கத்தாரில் முதன் முதலாக 90 மீட்டர் தூரத்திற்கும் மேல் எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார். அடுத்ததாக பாரிசில் 88 புள்ளி 16 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். இவ்வாறு இரு தொடரில் மொத்தமாக 15 புள்ளிகள் பெற்ற நீரஜ், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.