ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதியில் ஆங்காங்கே அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் உதம்பூரில் உள்ள நந்தி சுரங்கப்பாதை அருகே ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவைச் சீர் செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.