தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்மஸ்தலா வழக்கின் பின்னணியில் திருவள்ளூர் எம்.பி சசிகாந்தின் சதி இருப்பதாகக் கர்நாடக மாநில பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நாட்டையே உலுக்கும் வழக்கில் தமக்குத் தொடர்பிருப்பதாக எழுந்த புகாருக்கு அமைதி காப்பதன் மூலம் அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதா சுவாமி அமைந்துள்ளது. இந்த கோயில் அருகே ஓடும் நேத்ரவதி ஆற்றங்கரையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களின் உடல்களைப் புதைத்ததாக முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தன்னை கட்டாயப்படுத்தி இந்த விவரத்தைப் பேசச் சொன்னதாகப் புகார்தாரர் பிறழ் சாட்சி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புகார்தாரர் அளித்திருக்கும் வாக்குமூலம் உண்மையானது தானா? சென்னையிலிருந்து புகார்தாரரை மிரட்டிய கும்பல் எது என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை விரிவடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, புகார் தாரருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பிருப்பதாகப் பகிரங்கத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி எம்.பியான சசிகாந்த் செந்தில், 2009 ஆம் ஆண்டுமுதல் 2012ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலம் பல்லாரியின் உதவி கலெக்டராகவும், சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சிண கன்னடா போன்ற மாவட்டங்களின் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தைப் பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டி கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் மஞ்சுநாதா கோயிலின் பெருமையையும், புகழையும் சிதைக்க சசிகாந்த் செந்தில் முயற்சிப்பதாகவும் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தர்மஸ்தலா வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் வழங்க முதலமைச்சர் சித்தராமையாவுக்கு துளியளவும் விருப்பமில்லாத நிலையில் தமிழக காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் மேலிடத்தின் மூலமாகக் கொடுத்த அழுத்தமே சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கக் காரணம் எனவும் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார்.  மஞ்சுநாதா கோயிலின் புனிதத்தைக் கெடுக்க நடைபெறும் சதியை முறியடிப்பேன் எனவும், இந்த வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் தர்மஸ்தலா வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஒருவரின் பெயரும் அடிபடுவது தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகாந்த் செந்திலைத் தொடர்புப் படுத்தி எழுந்திருக்கும் புகாருக்கு உரியப் பதிலை வழங்காமல் அமைதி காப்பது அவர் மீதான சந்தேகத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

Tags: தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம்தமிழக காங்கிரஸ் எம்.பி?தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி எம்.பியான சசிகாந்த்New twist in Dharmasthala case: Tamil Nadu Congress MP who hatched a conspiracy?
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

Next Post

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies