தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?
Oct 6, 2025, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

Web Desk by Web Desk
Aug 21, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்மஸ்தலா வழக்கின் பின்னணியில் திருவள்ளூர் எம்.பி சசிகாந்தின் சதி இருப்பதாகக் கர்நாடக மாநில பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நாட்டையே உலுக்கும் வழக்கில் தமக்குத் தொடர்பிருப்பதாக எழுந்த புகாருக்கு அமைதி காப்பதன் மூலம் அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதா சுவாமி அமைந்துள்ளது. இந்த கோயில் அருகே ஓடும் நேத்ரவதி ஆற்றங்கரையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களின் உடல்களைப் புதைத்ததாக முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தன்னை கட்டாயப்படுத்தி இந்த விவரத்தைப் பேசச் சொன்னதாகப் புகார்தாரர் பிறழ் சாட்சி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புகார்தாரர் அளித்திருக்கும் வாக்குமூலம் உண்மையானது தானா? சென்னையிலிருந்து புகார்தாரரை மிரட்டிய கும்பல் எது என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை விரிவடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, புகார் தாரருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பிருப்பதாகப் பகிரங்கத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி எம்.பியான சசிகாந்த் செந்தில், 2009 ஆம் ஆண்டுமுதல் 2012ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலம் பல்லாரியின் உதவி கலெக்டராகவும், சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சிண கன்னடா போன்ற மாவட்டங்களின் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தைப் பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டி கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் மஞ்சுநாதா கோயிலின் பெருமையையும், புகழையும் சிதைக்க சசிகாந்த் செந்தில் முயற்சிப்பதாகவும் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தர்மஸ்தலா வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் வழங்க முதலமைச்சர் சித்தராமையாவுக்கு துளியளவும் விருப்பமில்லாத நிலையில் தமிழக காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் மேலிடத்தின் மூலமாகக் கொடுத்த அழுத்தமே சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கக் காரணம் எனவும் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார்.  மஞ்சுநாதா கோயிலின் புனிதத்தைக் கெடுக்க நடைபெறும் சதியை முறியடிப்பேன் எனவும், இந்த வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் தர்மஸ்தலா வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஒருவரின் பெயரும் அடிபடுவது தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகாந்த் செந்திலைத் தொடர்புப் படுத்தி எழுந்திருக்கும் புகாருக்கு உரியப் பதிலை வழங்காமல் அமைதி காப்பது அவர் மீதான சந்தேகத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

Tags: தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி எம்.பியான சசிகாந்த்New twist in Dharmasthala case: Tamil Nadu Congress MP who hatched a conspiracy?தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம்தமிழக காங்கிரஸ் எம்.பி?
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

Next Post

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

Related News

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies