வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!
Oct 16, 2025, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் வயல் வெளியில் கிடைக்கும் வைரக் கற்கள் சாதாரண விவசாயிகளின் வாழ்க்கையே ஜொலிக்க வைத்து வருகின்றன. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வைரக்கற்களைத் தேடி வயல்வெளியை நாடிய மக்கள், அதிர்ஷ்டத்திற்காகக் காத்துக்கிடக்கின்றனர்.

அதிர்ஷ்டம்.. சமானியரைத் திடீர் கோடீஸ்வரராக மாற்றும், வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

ஆந்திராவில் அப்படி அடித்த அதிர்ஷ்டம் ஒன்று, சமானியர்கள் பலரைப் பல லட்சங்களுக்கு அதிபதிகளாக்கியுள்ளது.

ஆந்திராவின் ராயலசீமா, கர்னூர், அனந்தபூர் மாவட்டங்களில் தற்போது தலைகாட்டியுள்ள மழை, வயல்வெளிகளில் அழுக்கு படிந்திருந்த வைரக்கற்களை ஜொலிக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக வயல் வெளிகளில் விவசாயிகளும், கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து விலைமதிப்பற்ற வைரக்கற்களைச் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

மழைக்குக் குளிக்கும் நிலங்களில் இருந்து வைரக்கற்களை எடுப்பதன் மூலம் தங்களது வாழ்க்கையையே மாற்றிக் கொள்ளக் கிராம மக்கள் விரும்புகிறார்கள். அதிர்ஷ்ட காற்று தங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்…

பெரவலி கிராமத்தில் விவசாயத் தொழிலாளியான வெங்கடேஸ்வர ரெட்டி, உள்ளூர் வியாபாரி ஒருவருக்கு 15 லட்சத்திற்கு வைரத்தை விற்றதாகப் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில் நில உரிமையாளரான பஜ்ரங்லால், தனது 40 ஏக்கர் நிலத்தில் கிராம மக்கள் வைரக் கற்களைத் தேடி வருவதாகவும், அதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினார்.

வைரத்தைத் தேடும் மக்களுக்குத் தண்ணீர், உணவு கூட தனது குடும்பத்தினர் வழங்குவதாகத் தெரிவித்தார் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மடிகேரா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாசுலு, அரியவகை வைரத்தைக் கண்டுபிடித்து அதனை 2 கோடி ரூபாய்க்கு விற்பனைச் செய்த செய்திகளும் கேள்விப்படுபவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.

இதுபோன்ற நம்பக்கையூட்டும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு எத்தனைக் கோடீஸ்வரர்கள் வைரக் கற்களால் ஜொலிக்கப் போகிறார்கள் என்பதை இங்குள்ள கிராம மக்கள் எண்ணிக் கொண்டே தேடும் பணியைத் தொடர்கிறார்கள். அவர்களது தேடலுக்குத் தீர்வு கிடைக்குமா என்பதே பலரது எதிர்பார்ப்பு.

Tags: ஆந்திராField? Diamond mine? : Villagers on a diamond huntdiamondவயல் வெளியில் கிடைக்கும் வைரக் கற்கள்
ShareTweetSendShare
Previous Post

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

Next Post

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

Related News

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், ‘ஜோஹோ’ நிறுவனம் உருவானது – ஸ்ரீதர் வேம்பு

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

கரூர் விவகாரத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுகவின் ஆட்சி விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும் – வீடியோ வெளியிட்ட நயினார் நாகேந்திரன்!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies