வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!
Jan 14, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் வயல் வெளியில் கிடைக்கும் வைரக் கற்கள் சாதாரண விவசாயிகளின் வாழ்க்கையே ஜொலிக்க வைத்து வருகின்றன. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வைரக்கற்களைத் தேடி வயல்வெளியை நாடிய மக்கள், அதிர்ஷ்டத்திற்காகக் காத்துக்கிடக்கின்றனர்.

அதிர்ஷ்டம்.. சமானியரைத் திடீர் கோடீஸ்வரராக மாற்றும், வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

ஆந்திராவில் அப்படி அடித்த அதிர்ஷ்டம் ஒன்று, சமானியர்கள் பலரைப் பல லட்சங்களுக்கு அதிபதிகளாக்கியுள்ளது.

ஆந்திராவின் ராயலசீமா, கர்னூர், அனந்தபூர் மாவட்டங்களில் தற்போது தலைகாட்டியுள்ள மழை, வயல்வெளிகளில் அழுக்கு படிந்திருந்த வைரக்கற்களை ஜொலிக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக வயல் வெளிகளில் விவசாயிகளும், கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து விலைமதிப்பற்ற வைரக்கற்களைச் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

மழைக்குக் குளிக்கும் நிலங்களில் இருந்து வைரக்கற்களை எடுப்பதன் மூலம் தங்களது வாழ்க்கையையே மாற்றிக் கொள்ளக் கிராம மக்கள் விரும்புகிறார்கள். அதிர்ஷ்ட காற்று தங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்…

பெரவலி கிராமத்தில் விவசாயத் தொழிலாளியான வெங்கடேஸ்வர ரெட்டி, உள்ளூர் வியாபாரி ஒருவருக்கு 15 லட்சத்திற்கு வைரத்தை விற்றதாகப் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில் நில உரிமையாளரான பஜ்ரங்லால், தனது 40 ஏக்கர் நிலத்தில் கிராம மக்கள் வைரக் கற்களைத் தேடி வருவதாகவும், அதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினார்.

வைரத்தைத் தேடும் மக்களுக்குத் தண்ணீர், உணவு கூட தனது குடும்பத்தினர் வழங்குவதாகத் தெரிவித்தார் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மடிகேரா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாசுலு, அரியவகை வைரத்தைக் கண்டுபிடித்து அதனை 2 கோடி ரூபாய்க்கு விற்பனைச் செய்த செய்திகளும் கேள்விப்படுபவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.

இதுபோன்ற நம்பக்கையூட்டும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு எத்தனைக் கோடீஸ்வரர்கள் வைரக் கற்களால் ஜொலிக்கப் போகிறார்கள் என்பதை இங்குள்ள கிராம மக்கள் எண்ணிக் கொண்டே தேடும் பணியைத் தொடர்கிறார்கள். அவர்களது தேடலுக்குத் தீர்வு கிடைக்குமா என்பதே பலரது எதிர்பார்ப்பு.

Tags: ஆந்திராField? Diamond mine? : Villagers on a diamond huntdiamondவயல் வெளியில் கிடைக்கும் வைரக் கற்கள்
ShareTweetSendShare
Previous Post

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

Next Post

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies