வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!
Aug 26, 2025, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் வயல் வெளியில் கிடைக்கும் வைரக் கற்கள் சாதாரண விவசாயிகளின் வாழ்க்கையே ஜொலிக்க வைத்து வருகின்றன. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வைரக்கற்களைத் தேடி வயல்வெளியை நாடிய மக்கள், அதிர்ஷ்டத்திற்காகக் காத்துக்கிடக்கின்றனர்.

அதிர்ஷ்டம்.. சமானியரைத் திடீர் கோடீஸ்வரராக மாற்றும், வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

ஆந்திராவில் அப்படி அடித்த அதிர்ஷ்டம் ஒன்று, சமானியர்கள் பலரைப் பல லட்சங்களுக்கு அதிபதிகளாக்கியுள்ளது.

ஆந்திராவின் ராயலசீமா, கர்னூர், அனந்தபூர் மாவட்டங்களில் தற்போது தலைகாட்டியுள்ள மழை, வயல்வெளிகளில் அழுக்கு படிந்திருந்த வைரக்கற்களை ஜொலிக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக வயல் வெளிகளில் விவசாயிகளும், கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து விலைமதிப்பற்ற வைரக்கற்களைச் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

மழைக்குக் குளிக்கும் நிலங்களில் இருந்து வைரக்கற்களை எடுப்பதன் மூலம் தங்களது வாழ்க்கையையே மாற்றிக் கொள்ளக் கிராம மக்கள் விரும்புகிறார்கள். அதிர்ஷ்ட காற்று தங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்…

பெரவலி கிராமத்தில் விவசாயத் தொழிலாளியான வெங்கடேஸ்வர ரெட்டி, உள்ளூர் வியாபாரி ஒருவருக்கு 15 லட்சத்திற்கு வைரத்தை விற்றதாகப் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில் நில உரிமையாளரான பஜ்ரங்லால், தனது 40 ஏக்கர் நிலத்தில் கிராம மக்கள் வைரக் கற்களைத் தேடி வருவதாகவும், அதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினார்.

வைரத்தைத் தேடும் மக்களுக்குத் தண்ணீர், உணவு கூட தனது குடும்பத்தினர் வழங்குவதாகத் தெரிவித்தார் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மடிகேரா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாசுலு, அரியவகை வைரத்தைக் கண்டுபிடித்து அதனை 2 கோடி ரூபாய்க்கு விற்பனைச் செய்த செய்திகளும் கேள்விப்படுபவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.

இதுபோன்ற நம்பக்கையூட்டும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு எத்தனைக் கோடீஸ்வரர்கள் வைரக் கற்களால் ஜொலிக்கப் போகிறார்கள் என்பதை இங்குள்ள கிராம மக்கள் எண்ணிக் கொண்டே தேடும் பணியைத் தொடர்கிறார்கள். அவர்களது தேடலுக்குத் தீர்வு கிடைக்குமா என்பதே பலரது எதிர்பார்ப்பு.

Tags: Field? Diamond mine? : Villagers on a diamond huntdiamondவயல் வெளியில் கிடைக்கும் வைரக் கற்கள்ஆந்திரா
ShareTweetSendShare
Previous Post

காலை உணவு திட்ட விரிவாக்கம் – பஞ்சாப் முதல்வருடன் இணைந்து தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!

Next Post

குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவிற்கு உற்சாக வரவேற்பு!

தெலங்கானா : பலரையும் கவரும் பழங்குடியின மக்களின் கைவினை பொருட்கள்!

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் : 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஸ்பிதி பள்ளத்தாக்கில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட மாரத்தான் போட்டி!

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் – இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு!

மேற்குவங்கம் : உள்ளூர் கால்பந்து போட்டியை பார்ப்பதற்கு மாற்றுத் திறனாளி மகனை முதுகில் சுமந்து சென்ற தந்தை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொடைக்கானல் : காரில் சுற்றுலா வந்தவர்களை தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற உள்ளூர் வாகன ஓட்டுநர்கள்!

ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

நெகமம் சாலைப்புதூரில் தேவாலயம் கட்ட அனுமதி தரக்கூடாது : விவேகானந்தா சேவா மையம் சார்பில் மனு!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட 8 குழந்தைகளுக்குத் திடீரென வலிப்பு!

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

லண்டன் : இந்திய உணவகத்திற்கு தீ வைத்த 15 வயது சிறுவன் கைது!

திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகத்தையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் : ஹெச். ராஜா

திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் : முன்னாள் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

வாணியம்பாடி அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies