தமிழக நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்.
கடந்த 2022ம் ஆண்டு அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றதை அடுத்து அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது நகர்ப்புற அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பங்கேற்றார்.