ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் உலக அளவில் நடைபெறும் பிற டி-20 லீக் தொடர்களில் விளையாட தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
38 வயதான இவர், கடந்த 2009ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகே 2010ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
சென்னைச் சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லிக் கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக அஷ்வின் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார்.
ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் 221 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார்.
ஐபிஎல் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அஷ்வின், இத்தனை ஆண்டுகளாக அற்புத நினைவுகளையும், உறவுகளையும் தந்த ஐபிஎல் அணிகள், நிர்வாகம் மற்றும் பிசிசிஐ -க்கு நன்றி எனவும் தன்னுடைய அடுத்த கட்டத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.