கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் ரயில்நிலையமான கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ரயில்நிலையத்தைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் இந்த ரயில் நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தின் எல்லைப் பகுதியின் இந்த ரயில் நிலையத்தை இருமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதோடு, பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய வாகன நிறுத்துமிடங்களும் இல்லை என்பதால் ரயில் நிலையம் செல்வோர் அனைவரும் பொது போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ரயில்நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய் பெருகெடுத்து ஓடுவதால் பயணிகளுக்குச் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையின் படி கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இதுவரை மூன்று முறை ஆய்வு செய்து சென்ற நிலையிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவலநிலையிலேயே காட்சியளிக்கிறது. இந்த ரயில்வே பகுதிகள் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே கட்டுப்பாட்டில் இருப்பதாலே, அதனைச் சீரமைப்பதில் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில்நிலையமாக மட்டுமல்லாமல், தமிழகத்தையும், கேரளத்தையும் இணைக்கும் மையமாக இருக்கும் இந்தக் குழித்துறை மேற்கு ரயில்நிலையத்தைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: கன்னியாகுமரி குழித்துறைதமிழகம்Passengers are suffering due to lack of basic facilities at Kanyakumari Kujithurai West railway station
ShareTweetSendShare
Previous Post

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies