கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!
Jun 22, 2026, 07:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் ரயில்நிலையமான கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ரயில்நிலையத்தைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் இந்த ரயில் நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தின் எல்லைப் பகுதியின் இந்த ரயில் நிலையத்தை இருமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதோடு, பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய வாகன நிறுத்துமிடங்களும் இல்லை என்பதால் ரயில் நிலையம் செல்வோர் அனைவரும் பொது போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ரயில்நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய் பெருகெடுத்து ஓடுவதால் பயணிகளுக்குச் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையின் படி கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இதுவரை மூன்று முறை ஆய்வு செய்து சென்ற நிலையிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவலநிலையிலேயே காட்சியளிக்கிறது. இந்த ரயில்வே பகுதிகள் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே கட்டுப்பாட்டில் இருப்பதாலே, அதனைச் சீரமைப்பதில் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில்நிலையமாக மட்டுமல்லாமல், தமிழகத்தையும், கேரளத்தையும் இணைக்கும் மையமாக இருக்கும் இந்தக் குழித்துறை மேற்கு ரயில்நிலையத்தைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: தமிழகம்Passengers are suffering due to lack of basic facilities at Kanyakumari Kujithurai West railway stationகன்னியாகுமரி குழித்துறை
ShareTweetSendShare
Previous Post

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies