கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!
Aug 23, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் ரயில்நிலையமான கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ரயில்நிலையத்தைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் இந்த ரயில் நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தின் எல்லைப் பகுதியின் இந்த ரயில் நிலையத்தை இருமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதோடு, பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய வாகன நிறுத்துமிடங்களும் இல்லை என்பதால் ரயில் நிலையம் செல்வோர் அனைவரும் பொது போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ரயில்நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய் பெருகெடுத்து ஓடுவதால் பயணிகளுக்குச் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையின் படி கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இதுவரை மூன்று முறை ஆய்வு செய்து சென்ற நிலையிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவலநிலையிலேயே காட்சியளிக்கிறது. இந்த ரயில்வே பகுதிகள் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே கட்டுப்பாட்டில் இருப்பதாலே, அதனைச் சீரமைப்பதில் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில்நிலையமாக மட்டுமல்லாமல், தமிழகத்தையும், கேரளத்தையும் இணைக்கும் மையமாக இருக்கும் இந்தக் குழித்துறை மேற்கு ரயில்நிலையத்தைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: தமிழகம்Passengers are suffering due to lack of basic facilities at Kanyakumari Kujithurai West railway stationகன்னியாகுமரி குழித்துறை
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

Related News

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

Load More

அண்மைச் செய்திகள்

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies