தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போயுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த கால அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. தேர்தல் சமயத்தில் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால், மாதம் ரூ.2,500 உதவித்தொகை, மாணவர்களுக்கு ரூ.4,000 கல்வி உதவித்தொகை மற்றும் ஆண்டிற்கு 6 இலவச சிலிண்டர்கள் என எதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
கடந்த 40 நாட்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட சட்டவிரோதச் சம்பவங்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாகப் புழங்குவது குறித்து அமைச்சர் ராஜமோகன் விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் சவால் விடுத்தார்.
அதிமுக தொண்டர்களைக் குறிவைத்து ‘குதிரை பேரம்’ நடத்தப்படுவதாகவும் அவர் கூறிளார்.
















