உடல் ஆரோக்கியத்தை பேண அனைவரும் நாள்தோறும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் மத்திய தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற கருப்பொருளில் நடப்பாண்டு யோகா தினம் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.
















