சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் கடந்த 13ஆம் தேதி ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாதித்தனர்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர் சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















