ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையிலான தொழில்நுட்ப பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தற்போதைய 60 நாள் போர்நிறுத்தக் காலத்தில், ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என கூறியுள்ளார். ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் பரந்த உடன்பாடு ஏற்படாவிட்டால் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் பாதுகாப்பை பேணுவதற்காகவும், அமெரிக்காவின் பங்களிப்புக்காகவும் சுங்கக் கட்டணங்களை வசூலிக்கலாம் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
















