பிரதமர் மோடி ஆட்சியில் உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரையிலான தேர்தல்கள் சுதந்திரமாக நடத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் யோகா விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் கிஷண்ரெட்டி பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்தார்.
பின்னர் பேசிய அவர், இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளதாகவும் 171 நாடுகள் யோகாவின் மகத்துவத்தை புரிந்து ஏற்றுக்கொண்டது எனவும் தெரிவித்தார். பகவத் கீதையில் யோகா பற்றிய குறிப்புகள் உள்ளதாக கூறிய அவர், குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுப்பதற்கு யோகா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாக குறிப்பிட்டார்.
















