சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் ‘நாரதர் விருது’ வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் விஷ்வ சம்வாத் கேந்திரா தமிழ்நாடு சார்பில் ‘நாரதர் விருதுகள் 2026’ விருது வழங்கும் நடைபெற்றது. தமிழ் ஜனம் தொலைக்காட்சி தொகுப்பாளரும், பத்திரிகையாளருமான அபினவ்விநாயக், பி.ஆர். ஸ்ரீனிவாஸ், , சந்தியா ரவிசங்கர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர் பேசிய தமிழ்ஜனம் செய்தி தொகுப்பாளர் அபினவ் விநாயக், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய தினமலர் குழும பதிப்பாளர் கோபால் ஜி, சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொறுப்பான தகவல் பரிமாற்றம் முக்கியம் என வலியுறுத்தினார்.
















