இந்தியக் கொடியை ஏந்திய மூன்று கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், இந்தியக் கொடியை ஏந்திய கச்சா எண்ணெயுடன் கூடிய மூன்று கப்பல்களான ‘தேஷ் வைபவ்’, ‘தேஷ் விபோர்’ மற்றும் ‘சன்மார் ஹெரால்ட்’ ஆகியவை, ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
94 இந்திய கப்பல் பணியாளர்களுடன் 8.6 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான சரக்குகளை ஏற்றிக்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு மிக உயர்ந்த முன்னுரிமையுடன் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
















