மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!
Oct 16, 2025, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

Web Desk by Web Desk
Aug 31, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அந்நிய முதலீட்டை இந்தியா பெறவுள்ளது. இது சாத்தியமானது எப்படி? என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரிவிதித்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இரண்டுநாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றார்  பிரதமர் நரேந்திர மோடி.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்மூலம் தேச நலனில் எத்தகைய சமரசத்துக்கும் இடமில்லை என்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குப் பிரதமர் மோடி உணர்த்தியிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பயணத்தால் இந்தியாவுக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. பில்லியன் கணக்கான டாலர் மதிப்புடைய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளன.

தொழில்நுட்பம், அரிய வகைக் கனிமங்கள், விண்வெளி ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஜப்பானும் சேர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செமி கண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, கழிவுநீர் மேலாண்மைப் போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து பயணிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக வெளியுறவுத்துறைத் தெரிவித்துள்ளது.

மேலும் ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரம் திறன்மிகு இந்தியர்களைப் பணிக்காக ஜப்பானுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திறமைவாய்ந்த இந்திய இளைஞர்கள் ஜப்பானில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இவைத் தவிர அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, ராணுவம் உள்ளிட்ட 8 முக்கியத் துறைகளில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் சந்திரயான் திட்டத்தில் ஜப்பானும் இணைந்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் 5’ என்ற PROJECT-ஐ செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

அதற்காக இந்தியா தயாரித்துள்ள LUNAR LANDER-ஐ ஜப்பானின் H 3 – 24 L ராக்கெட் சுமந்து செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாடு தயாரித்துள்ள LUNAR ROVER-ம் உடன் அனுப்பப்படவுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் 5 புள்ளி 96 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டிருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகம் மூலம் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இங்கு முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக லாபத்தைப் பெற்றுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

இந்தியா நம்மை மட்டுமே நம்பியில்லை என்பதை இனியாவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புரிந்துகொள்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: Modi's diplomacy: Japan to invest Rs. 6 lakh crore in Indiaமோடியின் ராஜதந்திரம்முதலீடு செய்யும் ஜப்பான்jappanpm modi newspm modi visit jappan
ShareTweetSendShare
Previous Post

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்சி – வெளியியிட்டார் இஸ்ரேல் பிரதமர்!

Next Post

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே இடத்தில் ஒன்று கூடிய முக்கிய தலைவர்கள்!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies