மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!
Jan 14, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

Murugesan M by Murugesan M
Aug 31, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அந்நிய முதலீட்டை இந்தியா பெறவுள்ளது. இது சாத்தியமானது எப்படி? என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரிவிதித்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இரண்டுநாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றார்  பிரதமர் நரேந்திர மோடி.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்மூலம் தேச நலனில் எத்தகைய சமரசத்துக்கும் இடமில்லை என்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குப் பிரதமர் மோடி உணர்த்தியிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பயணத்தால் இந்தியாவுக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. பில்லியன் கணக்கான டாலர் மதிப்புடைய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளன.

தொழில்நுட்பம், அரிய வகைக் கனிமங்கள், விண்வெளி ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஜப்பானும் சேர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செமி கண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, கழிவுநீர் மேலாண்மைப் போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து பயணிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக வெளியுறவுத்துறைத் தெரிவித்துள்ளது.

மேலும் ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரம் திறன்மிகு இந்தியர்களைப் பணிக்காக ஜப்பானுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திறமைவாய்ந்த இந்திய இளைஞர்கள் ஜப்பானில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இவைத் தவிர அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, ராணுவம் உள்ளிட்ட 8 முக்கியத் துறைகளில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் சந்திரயான் திட்டத்தில் ஜப்பானும் இணைந்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் 5’ என்ற PROJECT-ஐ செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

அதற்காக இந்தியா தயாரித்துள்ள LUNAR LANDER-ஐ ஜப்பானின் H 3 – 24 L ராக்கெட் சுமந்து செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாடு தயாரித்துள்ள LUNAR ROVER-ம் உடன் அனுப்பப்படவுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் 5 புள்ளி 96 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டிருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகம் மூலம் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இங்கு முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக லாபத்தைப் பெற்றுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

இந்தியா நம்மை மட்டுமே நம்பியில்லை என்பதை இனியாவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புரிந்துகொள்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: Modi's diplomacy: Japan to invest Rs. 6 lakh crore in Indiaமோடியின் ராஜதந்திரம்முதலீடு செய்யும் ஜப்பான்jappanpm modi newspm modi visit jappan
ShareTweetSendShare
Previous Post

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்சி – வெளியியிட்டார் இஸ்ரேல் பிரதமர்!

Next Post

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே இடத்தில் ஒன்று கூடிய முக்கிய தலைவர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies