கேரளாவில் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கிய லாரியின் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கேரளா மாநிலம் தாமரச்சேரி மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.
9 ஆவது வளைவைக் கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. லாரியின் முன் பகுதி அந்தரத்தில் தொங்கியதால் பதற்றம் நிலவியது.
தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் லாரி ஓட்டுநரைப் பத்திரமாக மீட்டனர்.