திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிக் கௌரவித்தார்.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் குடியரசு தலைவா் திரௌபதி முா்மு, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், அமைச்சா் கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிக் கௌரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பட்டம் பெற்ற பிறகும் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டு விடக்கூடாது என அறிவுரை வழங்கினார்.