சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து அங்கு மோப்ப நாய் உதவியுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை செய்தனர்.
பின்னர் வெடிகுண்டு மிரட்டல், புரளி என்பது தெரியவந்தது. உயர்நீதிமன்றத்திற்கு இதுவரை 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.