துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்து அசத்தியுள்ளார்.
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு – மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.
முன்னனி வீரர்களான ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி, தனது சிறப்பான ஆட்டத்தால் சதம் விளாசினார்.