ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், குலு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலைகளில் பெய்த கனமழையால் மரங்கள், மரக்கட்டைகள் வெள்ளத்தில் மண்ணோடு அடித்து வரப்பட்டதால், குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் சேறும் சகதியுமாகக் காணப்பட்டன.
மேகவெடிப்பு மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.