தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் விநாயகருக்குப் படைக்கப்பட்ட லட்டு சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுச் சாதனை படைத்துள்ளது.
ஹைதராபாத்தின் ரிச்மண்ட் வில்லாஸ் பகுதியில் விடப்பட்ட ஏலத்தில் பக்தர் ஒருவர் விநாயகர் லட்டை இரண்டு கோடியே 31 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இது கடந்த ஆண்டு ஒரு கோடியே 87 லட்சத்திற்கு விற்கப்பட்ட சாதனையை மீண்டும் முறியடித்துள்ளது.