ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் - வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 7, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

சென்னை பரங்கிமலையில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. நாடு முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் இங்கு ராணுவ பயிற்சி பெறுவது வழக்கம். அதன்படி, 130 ஆண் அதிகாரிகள், 25 பெண் அதிகாரிகள், இந்தியாவின் நட்பு நாடுகளைச் சேர்ந்த 21 பேர் என, மொத்தம் 176 பேர், 49 வார பயிற்சியை முடித்தனர்.

அவர்களுக்கான பட்டமளிப்பு விழா ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இருசக்கர வாகன அணிவகுப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அதேபோல, ராணுவ வீரர்கள் தற்காப்புக் கலைகளை நிகழ்த்திக் காட்டினர். மேலும், குதிரை சவாரி செய்தும், மிடுக்காக அணிவகுத்தும் அசத்தினர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கலந்து கொண்டார். அவர் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில், பயிற்சி முடித்த வீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் கண்கலங்கியபடி வீரர்களை கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வடசென்னையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான வரதராஜன் என்பவர், ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நாளை மறக்க முடியாது எனவும், நாட்டிற்காக சிறந்த முறையில் பணியாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.

இதேபோல், ராணுவ அதிகாரியாக பணியைத் தொடரவுள்ள வரப்பிரசாத் என்பவர், தனது பெற்றோரின் தியாகமும், OTA-ல் பெற்ற பயிற்சியுமே தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். தனது நாட்டுக்காக முழு மனதோடு சேவையாற்றப் போவதாகவும் அவர் கூறினார்.

இப்படி, பயிற்சி முடித்த அனைத்து வீரர்களும், அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சியுடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் இருந்தனர். இந்த 176 வீரர்களின் பயற்சி மட்டும்தான் தற்போது முடிந்துள்ளது. நாட்டிற்கு அவர்கள் ஆற்றவுள்ள பணி இனிதான் தொடங்கவுள்ளது.

Tags: parade and graduation ceremonymilitary officersChennaiMilitary Training CenterParangimalaiota nanganallur
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

Next Post

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies