ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் - வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!
Oct 23, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Sep 7, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

சென்னை பரங்கிமலையில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. நாடு முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் இங்கு ராணுவ பயிற்சி பெறுவது வழக்கம். அதன்படி, 130 ஆண் அதிகாரிகள், 25 பெண் அதிகாரிகள், இந்தியாவின் நட்பு நாடுகளைச் சேர்ந்த 21 பேர் என, மொத்தம் 176 பேர், 49 வார பயிற்சியை முடித்தனர்.

அவர்களுக்கான பட்டமளிப்பு விழா ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இருசக்கர வாகன அணிவகுப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அதேபோல, ராணுவ வீரர்கள் தற்காப்புக் கலைகளை நிகழ்த்திக் காட்டினர். மேலும், குதிரை சவாரி செய்தும், மிடுக்காக அணிவகுத்தும் அசத்தினர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கலந்து கொண்டார். அவர் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில், பயிற்சி முடித்த வீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் கண்கலங்கியபடி வீரர்களை கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வடசென்னையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான வரதராஜன் என்பவர், ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நாளை மறக்க முடியாது எனவும், நாட்டிற்காக சிறந்த முறையில் பணியாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.

இதேபோல், ராணுவ அதிகாரியாக பணியைத் தொடரவுள்ள வரப்பிரசாத் என்பவர், தனது பெற்றோரின் தியாகமும், OTA-ல் பெற்ற பயிற்சியுமே தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். தனது நாட்டுக்காக முழு மனதோடு சேவையாற்றப் போவதாகவும் அவர் கூறினார்.

இப்படி, பயிற்சி முடித்த அனைத்து வீரர்களும், அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சியுடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் இருந்தனர். இந்த 176 வீரர்களின் பயற்சி மட்டும்தான் தற்போது முடிந்துள்ளது. நாட்டிற்கு அவர்கள் ஆற்றவுள்ள பணி இனிதான் தொடங்கவுள்ளது.

Tags: parade and graduation ceremonymilitary officersChennaiMilitary Training CenterParangimalaiota nanganallur
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

Next Post

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

Related News

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

மாஞ்சோலை எஸ்டேட்டில் கனமழை – மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies