குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இண்டி கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டி களம் காண்கிறார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து விளக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்திலுள்ள சம்விதான் சதன் மத்திய அரங்கில் மதியம் 2.30 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.