பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். அவரது திடீர் முடிவுக்குக் காரணம் என்ன? அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பதைத் தற்போது பார்க்கலாம்..

ஜப்பானில் ஆளுங்கட்சியாக இருக்கும் Liberal Democratic Party-யில் பூதாகரமாக வெடித்த உட்கட்சி பூசல்… உள்ளாட்சி தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி. போன்ற பல்வேறு காரணங்களால் பிரதமர்  பதவியில் இருந்து விலகியுள்ளார் பிரதமர் ஷிகேரு இஷிபா..

68 வயதான இஷிபா, கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஜப்பான் பிரதமர்  பொறுப்பில் இருந்து வந்தார். அமெரிக்க வரி விதிப்பு, அதனால் ஏற்பட்ட அசாதாரணமான சூழல், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பிரதமர்  பொறுப்பை கவனித்து வந்தார் இஷிபா.

குறிப்பாக ஜப்பானிய மக்களின் பிரதான உணவான அரிசி மீது அமெரிக்கா அதிக வரியை விதித்தது. இதன் விளைவாக உள்ளூர்ச் சந்தையில் அரிசியின் விலைக் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.

இதன் காரணமாக ஆளும் Liberal Democratic Party-க்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசத் தொடங்கியது. அதுமட்டுமின்றி, கட்சியில் ஏற்பட்டுள்ள தொடர் அழுத்தத்தின் காரணமாகவும் இஷிபா தனது பதவியைத் துறந்ததாகக் கூறப்படுகிறது..

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷிகேரு இஷிபா, Liberal Democratic Party தலைவர்  பதவியில் இருந்தும், பிரதமர்  பதவியிலிருந்தும் விலகுவதாகக் கூறினார். இந்தத் தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கடமையை கடத்த விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்ட குரலில் பேசியது அனைவரையும் கவலைக் கொள்ள செய்தது.

ஜப்பானில் அரசியல் குழப்பங்கள் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தேர்தலில் ஏற்பட்ட தொடர்  தோல்விகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மைப் பலத்தை விட குறைவான உறுப்பினர்களைக் கொண்ட Liberal Democratic Party, கூட்டணி கட்சிகள் பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது…

இந்த நிலையில், இஷிபாவுக்கு அடுத்தபடியாக, அவரது அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்த ஷின்ஜிரோ கொய்சுமி கட்சியின் புதிய தலைவராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களான சநே டகாய்ச்சி, டகாயூகி கோபயாஷி, யோஷிமாசா ஹயாஷி ஆகியோரிடையே கடும் போட்டி இருக்கும என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனினும் கட்சி தலைமைக்கான தேர்தல்தான் புதிய தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும்.

Tags: Japanese Prime Minister resigns: What is the reason for Ishiba's sudden decision?இஷிபாபதவி விலகினார் ஜப்பான் பிரதமர்
ShareTweetSendShare
Previous Post

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

Next Post

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies