நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!
Jan 14, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த 8500 ஆண்டுகள் பழமையான நகரத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நகரம் எங்கு இருக்கிறது. எப்படி மூழ்கடிகப்பட்டது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் வளைகுடாவில், மூழ்கிக் கிடக்கும் ஒரு பழமையான நகரத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.

பனிகாலம் முடிந்து கடல் நீர் மட்டம் உயரும் என்பதால், இந்த நகரம் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். Stone Age Atlantis என அழைக்கப்படும், இந்த நகரத்தில் கல்லால் ஆன கருவிகள், விலங்குகளின் எலும்புகள், மரக் கருவிகள் ஆகியவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் 430 சதுர அடி கொண்ட பரப்பளவை ஆய்வாளர்கள், ஆய்வுக்கு உட்படுத்தினர். கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால், 8500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கற்கால மனிதர்களின் வாழ்க்கையை இந்நகரம் பிரதிபலிப்பதாகவும், அன்றைய கால வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டும் வகையிலும் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு ஐரோப்பிய கடற்கரை பகுதிகளில் மூழ்கிய கற்கால நகரங்களைக் கண்டறியும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆறாண்டு கால திட்டத்தின் ஒருபகுதியான இத்திட்டத்திற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அண்டர் வாக்யூம் கருவிகளைப் பயன்படுத்தி கடலுக்குள் 26 அடி ஆழம் வரை  சென்று, இந்நகரத்தைக் கண்டறிந்த ஆய்வாளர்கள், பழங்கால பொருட்களையும் சேகரித்துள்ளனர். இந்நகரத்தில், மீன்பிடி கருவிகள், ஈட்டிகள் போன்றவை இன்னும் கடலுக்கு அடியில் மறைந்திருக்கக் கூடும் என்று கூறும் ஆய்வாளர்கள், ஆய்வு பணிகளை  தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு கடலோரத்தில் கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, மீன்பிடித் தொழில் போன்றவற்றை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலில் நீர்மட்டம் உயர்வது போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களின்போது, கற்கால மனிதர்கள் தங்களை எப்படிக் காலநிலையுடன் பொருத்திக் கொண்டார்கள் என்பதையும், காலநிலை மாற்றத்திற்குத் தீர்வு காணவும் உதவும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.

Tags: Underwater city discovered: 8500 years oldநீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு8500 ஆண்டுகள் பழமை
ShareTweetSendShare
Previous Post

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

Next Post

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

Related News

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies