நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!
Sep 8, 2025, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

Web Desk by Web Desk
Sep 8, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த 8500 ஆண்டுகள் பழமையான நகரத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நகரம் எங்கு இருக்கிறது. எப்படி மூழ்கடிகப்பட்டது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் வளைகுடாவில், மூழ்கிக் கிடக்கும் ஒரு பழமையான நகரத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.

பனிகாலம் முடிந்து கடல் நீர் மட்டம் உயரும் என்பதால், இந்த நகரம் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். Stone Age Atlantis என அழைக்கப்படும், இந்த நகரத்தில் கல்லால் ஆன கருவிகள், விலங்குகளின் எலும்புகள், மரக் கருவிகள் ஆகியவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் 430 சதுர அடி கொண்ட பரப்பளவை ஆய்வாளர்கள், ஆய்வுக்கு உட்படுத்தினர். கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால், 8500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கற்கால மனிதர்களின் வாழ்க்கையை இந்நகரம் பிரதிபலிப்பதாகவும், அன்றைய கால வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டும் வகையிலும் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு ஐரோப்பிய கடற்கரை பகுதிகளில் மூழ்கிய கற்கால நகரங்களைக் கண்டறியும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆறாண்டு கால திட்டத்தின் ஒருபகுதியான இத்திட்டத்திற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அண்டர் வாக்யூம் கருவிகளைப் பயன்படுத்தி கடலுக்குள் 26 அடி ஆழம் வரை  சென்று, இந்நகரத்தைக் கண்டறிந்த ஆய்வாளர்கள், பழங்கால பொருட்களையும் சேகரித்துள்ளனர். இந்நகரத்தில், மீன்பிடி கருவிகள், ஈட்டிகள் போன்றவை இன்னும் கடலுக்கு அடியில் மறைந்திருக்கக் கூடும் என்று கூறும் ஆய்வாளர்கள், ஆய்வு பணிகளை  தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு கடலோரத்தில் கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, மீன்பிடித் தொழில் போன்றவற்றை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலில் நீர்மட்டம் உயர்வது போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களின்போது, கற்கால மனிதர்கள் தங்களை எப்படிக் காலநிலையுடன் பொருத்திக் கொண்டார்கள் என்பதையும், காலநிலை மாற்றத்திற்குத் தீர்வு காணவும் உதவும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.

Tags: Underwater city discovered: 8500 years oldநீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு8500 ஆண்டுகள் பழமை
ShareTweetSendShare
Previous Post

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

Next Post

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

Related News

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies