நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!
Aug 7, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 04:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த 8500 ஆண்டுகள் பழமையான நகரத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நகரம் எங்கு இருக்கிறது. எப்படி மூழ்கடிகப்பட்டது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் வளைகுடாவில், மூழ்கிக் கிடக்கும் ஒரு பழமையான நகரத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.

பனிகாலம் முடிந்து கடல் நீர் மட்டம் உயரும் என்பதால், இந்த நகரம் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். Stone Age Atlantis என அழைக்கப்படும், இந்த நகரத்தில் கல்லால் ஆன கருவிகள், விலங்குகளின் எலும்புகள், மரக் கருவிகள் ஆகியவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் 430 சதுர அடி கொண்ட பரப்பளவை ஆய்வாளர்கள், ஆய்வுக்கு உட்படுத்தினர். கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால், 8500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கற்கால மனிதர்களின் வாழ்க்கையை இந்நகரம் பிரதிபலிப்பதாகவும், அன்றைய கால வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டும் வகையிலும் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு ஐரோப்பிய கடற்கரை பகுதிகளில் மூழ்கிய கற்கால நகரங்களைக் கண்டறியும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆறாண்டு கால திட்டத்தின் ஒருபகுதியான இத்திட்டத்திற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அண்டர் வாக்யூம் கருவிகளைப் பயன்படுத்தி கடலுக்குள் 26 அடி ஆழம் வரை  சென்று, இந்நகரத்தைக் கண்டறிந்த ஆய்வாளர்கள், பழங்கால பொருட்களையும் சேகரித்துள்ளனர். இந்நகரத்தில், மீன்பிடி கருவிகள், ஈட்டிகள் போன்றவை இன்னும் கடலுக்கு அடியில் மறைந்திருக்கக் கூடும் என்று கூறும் ஆய்வாளர்கள், ஆய்வு பணிகளை  தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு கடலோரத்தில் கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, மீன்பிடித் தொழில் போன்றவற்றை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலில் நீர்மட்டம் உயர்வது போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களின்போது, கற்கால மனிதர்கள் தங்களை எப்படிக் காலநிலையுடன் பொருத்திக் கொண்டார்கள் என்பதையும், காலநிலை மாற்றத்திற்குத் தீர்வு காணவும் உதவும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.

Tags: Underwater city discovered: 8500 years oldநீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு8500 ஆண்டுகள் பழமை
Share
Tweet
SendShare
Previous Post

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

Next Post

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

Related News

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies