திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அரசு பள்ளியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கவரப்பேட்டை அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் சில மாணவர்கள் அச்சுறுத்தும் விதமாக ரீல்ஸ் வீடியோ எடுத்துச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.