குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!
Mar 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Sep 10, 2025, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய குடியரசு துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி. பி. ராதாகிருஷ்ணனுக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

சி.பி.ராதாகிருண்னனின் தலைமைப் பண்பானது தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, பிரதமரின் தொடர் சீரிய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை பின்பற்றி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவராகச் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது கடமையை உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், குடியரசு துணைத் தலைவர்ப் பொறுப்பில் சி.பி.ராதாகிருஷ்ணனின் பணி சிறக்க வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகத் தேர்வு செய்து குடியரசு துணைத்தலைவராக்கிய பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்து செய்தியில், அனைவரின் பேராதரவுடன் 15வது குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்று மாநிலங்களவையை வழிநடத்த இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பைத் தமிழ் மண்ணின் மைந்தர் ஒருவர் அலங்கரிக்க இருப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை நல்கி தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவிப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுவாழ்வின் ஆரம்ப காலத்தில் இருந்து தேசிய தலைவராக உயர்ந்தது வரை, சி.பி.ராதாகிருஷ்ணனின் உழைப்பு, விடாமுயற்சி இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய உதாரணம் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பெருமைமிகு மகனான சி.பி.ராதாகிருஷ்ணன், சேவை, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக எப்போதும் உயர்ந்து நிற்கிறார் எனவும் அண்ணாமலைத் தெரிவித்துள்ளார்.

Tags: cp radha krishnanLeaders congratulate C.P. Radhakrishnan on being elected as the Vice President of the Republic
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

Next Post

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies