குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!
Sep 13, 2026, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Sep 10, 2025, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய குடியரசு துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி. பி. ராதாகிருஷ்ணனுக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

சி.பி.ராதாகிருண்னனின் தலைமைப் பண்பானது தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, பிரதமரின் தொடர் சீரிய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை பின்பற்றி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவராகச் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது கடமையை உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், குடியரசு துணைத் தலைவர்ப் பொறுப்பில் சி.பி.ராதாகிருஷ்ணனின் பணி சிறக்க வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகத் தேர்வு செய்து குடியரசு துணைத்தலைவராக்கிய பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்து செய்தியில், அனைவரின் பேராதரவுடன் 15வது குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்று மாநிலங்களவையை வழிநடத்த இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பைத் தமிழ் மண்ணின் மைந்தர் ஒருவர் அலங்கரிக்க இருப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை நல்கி தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவிப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுவாழ்வின் ஆரம்ப காலத்தில் இருந்து தேசிய தலைவராக உயர்ந்தது வரை, சி.பி.ராதாகிருஷ்ணனின் உழைப்பு, விடாமுயற்சி இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய உதாரணம் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பெருமைமிகு மகனான சி.பி.ராதாகிருஷ்ணன், சேவை, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக எப்போதும் உயர்ந்து நிற்கிறார் எனவும் அண்ணாமலைத் தெரிவித்துள்ளார்.

Tags: cp radha krishnanLeaders congratulate C.P. Radhakrishnan on being elected as the Vice President of the Republic
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

Next Post

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies