வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!
Mar 15, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

Murugesan M by Murugesan M
Sep 10, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை அழைத்துச் செல்ல வீல் சேர்க்க வழங்கப்படாத விவகாரத்தில் இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதியவரை அழைத்துச் செல்வதற்கு வீல் சேர் கேட்டு இரண்டு மணி நேரம் கடந்தும் கிடைக்காத காரணத்தால் அந்த முதியவரை அவரது மகனே இழுத்துச் செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணி மேற்கொண்டு வரும் கிறிஸ்டல் எனும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல எனவும், அவர்களின் மெத்தனப் போக்கு வாடிக்கையாகவே நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல போதுமான பணவசதியின்றி அரசு மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளிடம் தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வதும் மிகுந்த சிரமத்தை உள்ளாக்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் ஐம்பது முதல் நூறு ரூபாய் கொடுத்தால் மட்டுமே வீல் சேர்த் தருவோம் என ஆணவத்துடன் பேசுவதாகவும் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உள்நோயாளிகளின் வார்டுகள், அதில் உள்ள படுக்கைகள் அசுத்தம் நிறைந்து காணப்படுவதோடு, மருத்துவமனை வளாகமும் குப்பைகள் நிறைந்து சுகாதாரச் சீர்கேடு நிலவும் நிலையில் இருப்பதாகவும் நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏழை, எளிய மக்களுக்குச் சிகிச்சை அளிக்கவே தொடங்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கான சிகிச்சையை  பெறவே போராட வேண்டியிருப்பது சுகாதாரத்துறையின் கட்டமைப்பை  கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

Tags: Refusal to provide wheelchair: The tragedy of the patient being dragged by his sonவீல் சேர் வழங்க மறுப்பு
ShareTweetSendShare
Previous Post

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Next Post

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies