நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!
Aug 6, 2026, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Murugesan M by Murugesan M
Sep 10, 2025, 08:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“ஹமி நேபாளம்” என்ற அமைப்பின் தூண்டுதலால் நேபாளத்தில் நடத்தப்பட்ட “GenZ இளைஞர்கள் போராட்டம் நேபாள அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நேபாளத்தில் ஜென் Z இளைஞர்களின் ஆவேசப் போராட்டம் சமூக ஊடகத் தடைக்கு எதிரானது மட்டுமல்ல. அரசின் ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்துக்கு எதிரான கோபமாகப் பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகத் தடை என்பது ஒரு தீப்பொறியாக, நேபாள இளைஞர்களின் கோபம், காட்டுத் தீயாக இன்னமும் கொழுந்து விட்டு எரிகிறது.

ஆத்திரத்தில், மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் தாக்கப்பட்டனர். அரசு அலுவலகங்கள்,காவல் நிலையங்கள்,ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. குறிப்பாக, நாடாளுமன்ற வளாகம், அதிபர், பிரதமர்,அமைச்சர்கள் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

இளைஞர்களின் போராட்டம் ஒரே நாளில் அரசின் அடித்தளத்தையே அசைத்துவிட்டது. பிரதமர்க் கே.பி. ஷர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பி சென்றுள்ளனர்.

நேபாள இளைஞர்களின் போராட்டம், சிறை உடைப்புக்கும் வழி வகுத்தது. லலித்பூர் நகு சிறைத் தீவைக்கப்பட்டது. கூட்டுறவு நிதி மோசடி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சியின் தலைவரும், நேபாளத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருமான ரபி லாமிச்சானைப் போராட்டக்காரர்கள் விடுவித்தனர்.

இந்தச் சிறையில் இருந்த சுமார் 1200க்கும் மேற்பட்ட மொத்த கைதிகளும் தப்பியதாகக் கூறப்படுகிறது. இதேபோல், துளசிபூர்  சிறையும் உடைக்கப்பட்டதால், அங்கிருந்த கைதிகளும் தப்பியுள்ளனர்.

போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரவும், அமைதியை நிலைநாட்டவும், இராணுவம் அரசு நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ளது. நாடு தழுவிய பாதுகாப்பு நடவடிக்கையாக, நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

நேபாளத்துடன் 729 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பீகாரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சீதாமர்ஹி, மதுபானி, அராரியா, சுபால் மற்றும் கிஷன்கஞ்ச் ஆகிய ஏழு மாவட்டங்கள் உயர்மட்ட கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி, பால்ராம்பூர், பஹ்ரைச், பிலிபிட், லக்கிம்பூர் கேரி, சித்தார்த்நகர் மற்றும் மகாராஜ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளன.

எல்லைப் பாதுகாப்புப் பணியில் நாட்டின் துணை ராணுவப் படையான சஷாஸ்திரச் சீமா பால் (SSB), கண்காணிப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து ஆழ்ந்த கவலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags: Tensions continue in Nepal: Indian borders under close surveillanceதீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்ஹமி நேபாளம்
Share
Tweet
SendShare
Previous Post

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

Next Post

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies