ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? - நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!
Sep 10, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

Web Desk by Web Desk
Sep 10, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலிவுட் நடிகை  கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் SUNJAY KAPOOR உயிரிழந்துவிட்ட நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை வெடித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் வரைச் சென்றுள்ள வழக்கு தொடர்பாக விரிவாகப் பார்ப்போம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திரமாக ஜொலித்த கரிஷ்மா கபூரும், தொழிலதிபருமான SUNJAY KAPOORம் 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்தத் தம்பதி, 2016ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பின்னர்  பிரியா சச்தேவ் என்பவரை  திருமணம் செய்து கொண்டார் SUNJAY KAPOOR. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை  கொண்டிருந்த 53 வயதான SUNJAY KAPOOR, கடந்த ஜூன் மாதம் லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் தான் SUNJAY KAPOOR-ன் சொத்துகள் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை வெடித்துள்ளது. SUNJAY KAPOORருடன் வாழ்ந்து வந்த பிரியா சச்தேவ், கணவரின் சொத்து தனக்கும், தன் மகனுக்குமே சொந்தம் என்று கூறுகிறார். இதற்கு ஆதாரமாக SUNJAY KAPOORரின் உயிலை அவர் முன்வைக்கிறார்.

அதே நேரத்தில் SUNJAY KAPOORரின் சொத்துகளுக்குத் தாங்களே வாரிசு என்று கூறுகின்றனர்  கரிஷ்மா கபூரின் குழுந்தைகளான சமைராவும், கியானும். இந்தச் சொத்து பிரச்னை வெறும் வார்த்தை மோதலாக மட்டுமே இல்லாமல் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளது.

கரீஷ்மா கபூரின் பிள்ளைகள் இருவரும், தந்தை SUNJAY KAPOOR சொத்தில் உரிமை  கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுடைய தந்தையின் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்குத் தாங்களே வாரிசு என்றும், தங்களுக்கே அது சொந்தமாக வேண்டும் எனவும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

மேலும், தன்னுடைய தந்தையுடன் வாழ்ந்து வந்த பிரியா, தந்தை எழுதி வைத்த உயிலை மாற்றி எழுதி மோசடி செய்திருப்பதாகவும் மனுவில் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். உண்மையான உயிலை அவர்கள் யாரிடமும் காட்டவில்லை என்றும், சட்டப்படி சொத்து தங்களுக்கே சேர வேண்டும் எனவும், எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறும் மனுவில் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தபோது ஆஜரான பிரியா, SUNJAY KAPOOR – கரிஷ்மா கபூர் விவாகரத்தை  சுட்டிக்காட்டி, தாம் தான் சட்டப்பூர்வ மனைவி என வாதிட்டார். மேலும், கரிஷ்மாவின் குழந்தைகள் ஏற்கெனவே 1900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

SUNJAY KAPOORரின் சகோதரியான மந்திரா கபூர், தன்னுடைய தாயார் ராணி கபூரை  கட்டாயப்படுத்தி சில ஆவணங்களில் பிரியா கையெழுத்து பெற்றிருப்பதாகவும், SUNJAY KAPOOR இறந்த சில நாட்களிலேயே இது நடந்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது எந்த மாதிரியான ஆவணங்கள் என்பதைத் தங்களிடம் தெரிவிக்க மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள SUNJAY KAPOORரின் தாய் ராணி கபூர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், நீதிமன்றத்தில் இதையே சுட்டிக்காட்டினார். மேலும், தனது மகனின் சொத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு ராணி கபூர் உரிமை  கோரினார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், உயிலின் நகலை கரிஷ்மாவின் குழந்தைகளிடம் ஏன் கொடுக்கவில்லை என்று ப்ரியாவுக்குக் கேள்வி எழுப்பியதுடன், நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. மேலும், பிரியாவின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சொத்து பிரச்னைக்கிடையே, SUNJAY KAPOOR மரணம் தொடர்பாகவும் அவரது குடும்பத்தினர்  சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர். SUNJAY KAPOORரின் இறப்பு இயற்கையான மரணம் அல்ல என்றும், சந்தேகத்திற்கிடமானது எனவும், அவரது தாயார் ராணி கபூர்  குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக இங்கிலாந்து அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி, விசாரணை நடத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மந்திரா கபூரும் தனது சகோதரர் SUNJAY KAPOORரின் மரணத்தில் சந்தேகம் எழுப்பியிருப்பதால், பாலிவுட் திரை உலகில் பரபரப்பு நிலவுகிறது.

Tags: cinema newsWho owns the Rs.30 thousands crore property? - The actress's family has approached the court!SUNJAY KAPOOR
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Next Post

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

Related News

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies