இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?
Sep 12, 2025, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

Web Desk by Web Desk
Sep 12, 2025, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக வலைத்தளங்களுக்கான தடைக்கு எதிரான GEN Z இளைஞர்களின் போராட்டம், 24 மணி நேரத்துக்குள் நேபாள அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி, நேபாளம் இந்து தேசமாக மன்னர் ஆட்சிக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

அரசியல் நிலையின்மையால் நாட்டில் வளர்ச்சி இல்லை எனப் பெரும்பாலான நேபாள மக்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு நேபாளத்தின் வளர்ச்சி விகிதம் 3.1 சதவிகிதமாக இருந்தது. நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்கு வெளிநாட்டில் வசிக்கும் நேபாள மக்களிடமிருந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் சுமார் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேபாளத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இளைய தலைமுறையினரின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல், அமைதியான நேபாள மக்களுக்கு எதிரான அரசின் வன்முறையை நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா கண்டித்துள்ளார்.

முன்னதாக, 2006ம் ஆண்டில், நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து, ஞானேந்திரா ஷா நாடாளுமன்றத்தைக் கொண்டு வந்தார். இரண்டு ஆண்டுகளில் 239 ஆண்டுகால மன்னராட்சியை ஒழித்து, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து சராசரி குடிமகனாக ஞானேந்திர ஷா வாழ்ந்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் ஞானேந்திரா மேற்கு நேபாளச் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அரசக் குடும்ப ஆதரவாளர்கள் சுமார் 10,000 தலைநகர் வழியாக அணிவகுத்துச் சென்று திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் மன்னரை வரவேற்றனர். கூடுதலாக, முடியாட்சி திரும்பவும், நேபாளத்தை மீண்டும் ஒரு இந்து நாடாக அறிவிக்கவும் அழைப்பு விடுத்தனர்.

உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் 2015 ஆம் ஆண்டு, கொண்டுவரப்பட்டது. சீனாவின் உதவியுடன் நேபாளத்தின் அரசியல் அமைப்பின் மீது தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்க மாவோயிஸ்டுகள் நாட்டை ‘மதச்சார்பற்ற’ நாடாக மாற்றினர் என்று கூறப்படுகிறது. அப்போதே அரசியல் சாசனத்துக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன.

கடந்த 17 ஆண்டுகளில் 14 அரசுகள் மாறியுள்ளன. எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ததில்லை. நாட்டில் அரசியல் குழப்பங்களே நிலவி வந்தன.

2015ம் ஆண்டு, மன்னராட்சி காலத்தில் இருந்ததைப் போலவே நேபாளத்தை ‘ இந்து ராஷ்ட்ரம் ‘ என்று அறிவிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, பல நூற்றாண்டுகளாகவே யோகி ஆதித்யநாத்தின் கீழ் இயங்கும் கோரக்நாத் மடம் தான் நேபாள அரசக் குடும்பத்தின் ராஜ குருமடமாக விளங்கி வருகிறது.

நாடாளுமன்றத்தில் 14 உறுப்பினர்களைக் கொண்ட ராஷ்டிரிய பிரஜாதந்திரா கட்சி மீண்டும் மன்னர்  தலைமையில் ஆட்சி வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நேபாளத்தை இந்து தேசமாக அதன் பண்டைய அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான இயக்கம் வளர்ந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக அரசு மீது அதிருப்தியடைந்துள்ள நேபாள மக்கள் மீண்டும் மன்னராட்சிக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர். NEPAL FOR CHRIST நேபாளம் ஏசுவுக்கே என்பது போன்ற வெளிப்படையான பெயர்களில் மதமாற்ற சக்திகளும் நேபாளத்தைச் சொந்தம் கொண்டாட செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் இந்து தேசமாக அறிவிப்பது ஒன்றுதான் சரியான நடவடிக்கை என்று பெரும்பாலான நேபாள மக்கள் விரும்புகின்றனர்.

Tags: nepalNepal issueNepal becoming a Hindu nation: Support for the revival of monarchy?இந்து தேசமாகும் நேபாளம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

Next Post

இரட்டை கோபுரத்தில் இருந்து குதித்தவர் யார்? – 24 ஆண்டுகளாக மக்களை குழப்பும் புகைப்படம்!

Related News

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

மத்தியபிரதேசம் : ரூ.10,000 சம்பளம் வாங்கும் சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி!

கேரளா : மூளைத் தொற்றால் ஒரே மாதத்தில் 6 பேர் உயிரிழப்பு – மக்கள் அச்சம்!

F404 எஞ்சினை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு வழங்கிய ஜெனரல் எலக்ட்ரிக்!

இந்தியா- பாக். போட்டியை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை  காவல் ஆணையர் அலுவலகம் அருகே திடீரென்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை – பேரூராட்சி தலைவர் கைது!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – லக்‌ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை – முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!

டெல்லி, மும்பை  உயர் நீதிமன்றங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்!

ஒடிசா : நேபாளத்தில் அமைதியை வலியுறுத்தும் மணல் சிற்பம்!

வெளியானது ‘சக்தித் திருமகன்’ படத்தின் ப்ரோமோ!

இந்தியா – பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் போர் விமான இன்ஜின்!

மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies