உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? - நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!
Mar 15, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செவ்வாய் கிரகத்தில் பில்லியன் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதியானவையா? என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மார்ஸ் ரோவரை விண்ணுக்கு அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தின் புவியியல் அம்சங்களை ஆராய்ந்து தரவுகளைச் சேகரித்துப் பூமிக்கு அனுப்பி வரும் மார்ஸ் ரோவர் விண்கலம், தற்போது பிரமிக்க வைக்கும் தகவலை  பூமிக்கு அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வறண்ட நதி கால்வாயில் பாறைகள் இருப்பதை கண்டறிந்துள்ள விண்கலம், அது குறித்து சமிஞ்ஞைகளை  பூமிக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை நேரடியாகக் கண்டறியும் அளவுக்கு திறன் படைத்தது இல்லை மார்ஸ் ரோவர் விண்கலம் . மாறாக, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்ட இடங்களில் பாறைகளை ஊருடுவி, பின்னர் அது குறித்த தரவுகளைப் பூமிக்கு அனுப்பும் திறன்பெற்றுள்ளது. மாதிரிகளையும் சேகரித்து வருகிறது

அந்த வகையில் தான், வறண்ட நதி கால்வாயில் பாறைகள் இருப்பதாக மார்ஸ் ரோவர்  தகவல் அனுப்பியுள்ளது. இதன்மூலம் மட்டுமே, உயிரினங்கள் வாழத் தகுதியான கிரகம் செவ்வாய் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மார்ஸ் ரோவர் விண்கலம் இதுவரை 25 மாதிரிகளை சேகரித்து வைத்துள்ளது. மொத்தம் 30 மாதிரிகளை  சேமிக்கும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரகம் தொடர்பான மேலும் பல விவரங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

2030-ம் ஆண்டில் தான் விண்கலம் பூமிக்குத் திரும்பும் எனக் கூறப்படும் நிலையில், அதுவரைச் செவ்வாய் கிரகம் தொடர்பான நேரடி மாதிரிகள் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.

அப்படி, நேரடியாக மாதிரிகள் கைக்குக் கிடைக்கும்போது, அண்டார்டிக்காவில் நுண்ணுயிரிகள் வாழ்வது எப்படி உறுதி செய்யப்பட்டதோ ? அதே போன்றதொரு சோதனையை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய முடியும்.

எப்படி என்று கேட்கிறீர்களா, பொதுவாக SULFATE MINERAL-களை SULPHIDE – ஆக மாற்றும் குணம் கொண்டது நுண்ணுயிரிகள். மார்ஸ் ரோவர் விண்கலம் கொண்டு வரும் மாதிரிகளிலும் அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தால், செவ்வாய் கிரகமும் உயிரினங்கள் வாழத் தகுதியானது என்று உறுதியாகக் கூறலாம்.

Tags: Is Mars habitable? - NASA's Mars Rover's amazing discoveryசெவ்வாய் கிரகம்செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதியானவையா?
ShareTweetSendShare
Previous Post

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும் – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies