உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? - நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!
Sep 12, 2025, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செவ்வாய் கிரகத்தில் பில்லியன் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதியானவையா? என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மார்ஸ் ரோவரை விண்ணுக்கு அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தின் புவியியல் அம்சங்களை ஆராய்ந்து தரவுகளைச் சேகரித்துப் பூமிக்கு அனுப்பி வரும் மார்ஸ் ரோவர் விண்கலம், தற்போது பிரமிக்க வைக்கும் தகவலை  பூமிக்கு அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வறண்ட நதி கால்வாயில் பாறைகள் இருப்பதை கண்டறிந்துள்ள விண்கலம், அது குறித்து சமிஞ்ஞைகளை  பூமிக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை நேரடியாகக் கண்டறியும் அளவுக்கு திறன் படைத்தது இல்லை மார்ஸ் ரோவர் விண்கலம் . மாறாக, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்ட இடங்களில் பாறைகளை ஊருடுவி, பின்னர் அது குறித்த தரவுகளைப் பூமிக்கு அனுப்பும் திறன்பெற்றுள்ளது. மாதிரிகளையும் சேகரித்து வருகிறது

அந்த வகையில் தான், வறண்ட நதி கால்வாயில் பாறைகள் இருப்பதாக மார்ஸ் ரோவர்  தகவல் அனுப்பியுள்ளது. இதன்மூலம் மட்டுமே, உயிரினங்கள் வாழத் தகுதியான கிரகம் செவ்வாய் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மார்ஸ் ரோவர் விண்கலம் இதுவரை 25 மாதிரிகளை சேகரித்து வைத்துள்ளது. மொத்தம் 30 மாதிரிகளை  சேமிக்கும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரகம் தொடர்பான மேலும் பல விவரங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

2030-ம் ஆண்டில் தான் விண்கலம் பூமிக்குத் திரும்பும் எனக் கூறப்படும் நிலையில், அதுவரைச் செவ்வாய் கிரகம் தொடர்பான நேரடி மாதிரிகள் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.

அப்படி, நேரடியாக மாதிரிகள் கைக்குக் கிடைக்கும்போது, அண்டார்டிக்காவில் நுண்ணுயிரிகள் வாழ்வது எப்படி உறுதி செய்யப்பட்டதோ ? அதே போன்றதொரு சோதனையை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய முடியும்.

எப்படி என்று கேட்கிறீர்களா, பொதுவாக SULFATE MINERAL-களை SULPHIDE – ஆக மாற்றும் குணம் கொண்டது நுண்ணுயிரிகள். மார்ஸ் ரோவர் விண்கலம் கொண்டு வரும் மாதிரிகளிலும் அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தால், செவ்வாய் கிரகமும் உயிரினங்கள் வாழத் தகுதியானது என்று உறுதியாகக் கூறலாம்.

Tags: Is Mars habitable? - NASA's Mars Rover's amazing discoveryசெவ்வாய் கிரகம்செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதியானவையா?
ShareTweetSendShare
Previous Post

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

Next Post

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

Related News

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

ஒடிசா : நேபாளத்தில் அமைதியை வலியுறுத்தும் மணல் சிற்பம்!

இந்தியா – பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் போர் விமான இன்ஜின்!

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

விளையாட்டு மைதானத்தின் அவலம் : தெருநாய்கள் தொல்லையால் அலறும் விளையாட்டு வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

சென்னை  காவல் ஆணையர் அலுவலகம் அருகே திடீரென்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை – பேரூராட்சி தலைவர் கைது!

மத்தியபிரதேசம் : ரூ.10,000 சம்பளம் வாங்கும் சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி!

கேரளா : மூளைத் தொற்றால் ஒரே மாதத்தில் 6 பேர் உயிரிழப்பு – மக்கள் அச்சம்!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – லக்‌ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை – முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!

F404 எஞ்சினை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு வழங்கிய ஜெனரல் எலக்ட்ரிக்!

டெல்லி, மும்பை  உயர் நீதிமன்றங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies