பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!
Jan 14, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டத்தை வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்குப் பிறகு பிரேசில் குடியரசாக மாறியதிலிருந்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதற்காக முன்னாள் அதிபர் தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறை. அது பற்றிய செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

2022-ல் நடந்த பிரேசில் தேர்தலில் அதிபர் போல்சனாரோ, அதிர்ச்சி தோல்வி அடைந்தார். தேர்தலில் நடந்த முறைகேடுகள் தான் தமது தோல்விக்குக் காரணம் என்று போல்சனாரோ குற்றஞ்சாட்டியிருந்தார். ராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகளின் ஆதரவைப் பெற முடியாததால், தேர்தல் முடிவுகளை ராணுவ முன்னாள் கேப்டனான போல்சனாரோவால் மாற்றமுடியவில்லை.

ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோதிலும், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு அதிபராவோம் என்று லூலா கூட நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். 2023ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அதிபராக லுாலா டா சில்வா பதவியேற்றார்.

பதவியேற்கும் போதே தனது அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாது என்றும், அதே நேரம் தவறு செய்தவர்கள் நீதிக்குப் பதிலளிப்பார்கள் என்றும் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்திருந்தார்.

அடுத்த 8வது நாளில் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் தலைநகரில் அரசு அலுவலகங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்ததாகவும் போல்சனாரோ மீது குற்றம் சாட்ட பட்டது.

பிரேசிலின் வாக்களிப்பு முறையே மோசடியானது என்று பொய்யாகக் கூறியதற்காகப் போல்சனாரோ 2030 வரை எந்தப் பொதுப் பதவிக்கும் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லுலா டா சில்வா தலைமையில் ஆட்சி அமைவதைத் தடுக்கும் வகையில் சதி திட்டம் தீட்டியதாகவும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்ததாகவும் போல்சனாரோ மீது குற்றம் சாட்டபட்டது.

அர்ஜென்டினாவுக்குத் தப்பியோட முயன்றதாகவும், தனது மகன் எட்வர்டோவுடன் சேர்ந்து நீதிமன்ற விசாரணையில் தலையிட முயன்றதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தந்தையும், மகனும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வு போல்சனாரோவை குற்றவாளி என்று அறிவித்துள்ளது. அவருக்கு 27 ஆண்டுகள் 3 மாத சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் போல்சனாரோவை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர். வாக்காளர்களின் விருப்பத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு, அரசியலமைப்புக்கு எதிரான வழிகளில் தன்னைத் அதிபராக நிலைநிறுத்த போல்சனாரோ தீவிரமாகச் சதி செய்ததாக நீதிபதிகள் உறுதி படுத்தியுள்ளனர்.

ஜனநாயகச் சட்டத்தின் ஆட்சியை ஒழிக்க முயற்சித்தது, ஆட்சிக் கவிழ்க்க முயற்சி செய்தது, பொது சொத்துக்களை அடுத்து நொறுக்குதல்,பாதுகாக்கப்பட்ட தேசிய பாரம்பரிய இடங்களுக்குச் சேதம் விளைவித்தல், ஆகிய குற்ற சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, அதிபர் வேட்பாளர் லூலாவையும் அவரது துணை அதிபர் வேட்பாளர் ஜெரால்டோ அல்க்மினையும் படுகொலைச் செய்யவும், தன் மீதான விசாரணையை மேற்பார்வையிட்டு வரும் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸைக் கைது செய்து தூக்கிலிடவும் திட்டமிட்டிருந்த ஒரு சதித்திட்டம் குறித்தும் தங்களுக்குத் தெரியும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐந்து நீதிபதிகளில் இரண்டு பேர் போல்சனாரோவைக் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்து இருந்தால் மட்டுமே மேல்முறையீட்டுக்குச் செல்ல முடியும். எனவே, வயதைக் காரணம் காட்டி வீட்டுக்காவலிலேயே சிறைத் தண்டனையை அனுபவிக்க கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே போல்சனாரோ சிறந்த மனிதர் என்று கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், இந்தத் தீர்ப்பு தன்னை வருத்தமடைய வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளியான பிரேசிலின் உச்ச நீதிமன்ற நீதிபதியும் மற்றும் பிற நீதிபதிகளும் முன்னாள் அதிபர்  போல்சனாரோவை சிறையில் அடைக்க அநியாயமாகத் தீர்ப்பளித்துள்ளனர் என்றும், பிரேசிலில் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கைள் தொடர்கிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இந்தத் தீர்ப்பை கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், பிரேசிலின் இந்தச் சூனிய வேட்டைக்கு, அதற்கேற்ப அமெரிக்கா பதிலளிக்கும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் ட்ரம்ப், பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags: Former Brazilian president sentenced to 27 years in prison - US President Trump condemnsபிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனைஅதிபர் ட்ரம்ப் கண்டனம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

Next Post

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies