சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அர்ப்பணிப்புள்ள பொது ஊழியரான அவர், தேசத்தைக் கட்டியெழுப்புதல், சமூக சேவை மற்றும் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அவரது குடியரசு துணை தலைவர் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.