மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
May 6, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 13, 2025, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிசோரமில் ஒன்பதாயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்குவங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். மிசோரம் தலைநகர் ஐசோல் சென்ற பிரதமர் மோடி, 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதிலும் முக்கியமாக மிசோரம் தலைநகரை இந்திய ரயில்வேயுடன் இணைக்கும் பைரபி – சாய்ரங் ரயில் பாதையை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பைரபி – சாய்ரங் ரயில் பாதை சுமார் 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 45 சுரங்கப் பாதைகள் மற்றும் 55 மேம்பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 52 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பாதையில் 88 சிறிய பாலங்களும் உள்ளன.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ஐசோல் இன்று முதல் இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம்பெறும் என்றும், நாட்டு மக்களுக்கு இந்த ரயில் பாதையை பெருமையுடன் அர்ப்பணிப்பதாகவும் கூறினார். மேலும், மிசோரமில் உள்ள சாய்ரங் பகுதி, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், முதல் முறையாக டெல்லியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

சில கட்சிகள் நீண்ட காலமாக வாக்குவங்கி அரசியலை கடைப்பிடித்து வருவதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் எட்டாக்கனியாக இருந்த மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை, ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மலிவு விலையாகி விட்டதாகவும் தெரிவித்தார்.

Tags: prime minister modiMizoramBhairabi-Sairang railway lineRajdhani Express train.various development projects
ShareTweetSendShare
Previous Post

விமான விபத்தை தடுக்கும் மறுபிறப்புத் திட்டம்!

Next Post

நீலகிரி : குடியிருப்புக்குள் உலா வரும் கரடி – மக்கள் அச்சம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies