மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி - போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!
Mar 15, 2026, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னைச் சூளைமேடு பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

மழைக்காலங்களில் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிடுவது வழக்கம். சாலைகளில் நீர் தேங்கியும், தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்தும் மக்களைப் படாத பாடு படுத்தி விடும்.

குறிப்பாக, சூளைமேடு பகுதி மழைக் காலங்களில் அதிகப் பாதிப்பை சந்திக்கிறது. இதனைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மந்த கதியால் அப்பணி நடைபெறுவதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சூளைமேட்டில் உள்ள அண்ணா நெடும்பாதை, பஜனைகோயில் தெரு, வடஅகரம் சாலை, பெரியார் பாதை உட்பட பல இடங்களில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தொடர்பாக முறையான முன்னறிவிப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும், அதிகாரிகள் திடீரெனச் சாலையை தோண்டி போட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஜனைக் கோயில் தெரு பகுதியில் மழைநீர் வடிகால் பணி தொடங்கப்பட்டது. இதன் காரணமாக அந்தச் சாலை முழுவதுமாக மூடப்பட்டதால், பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஒருகட்டத்தில் மக்களின் கோபம் எல்லையைக் கடக்கவே, அவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பஜனைக் கோயில் தெருவில் மக்கள் பயணிக்கச் சிறிய வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

மழைநீர் வடிகால் பணியால் அண்ணா நெடும்பாதை ஏற்கனவே சுருங்கிவிட்டது. இந்நிலையில், பிற பகுதிகளில் சாலை அடைக்கப்பட்டதால் அவ்வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்களும் அண்ணா நெடும்பாதையிலேயே பயணிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஒருபுறம் தோண்டி போடப்பட்டுள்ள குழிகள் மற்றும் அடைக்கப்பட்ட சாலைகள். மறுபுறம் விழி பிதுங்க வைக்கும் போக்குவரத்து நெரிசல். இதனால், சென்னைச் சூளைமேடு பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Stormwater drainage work at a slow pace - people are suffering due to traffic congestion!மந்த கதியில் மழைநீர் வடிகால் பணிவிழி பிதுங்கும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

Next Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies