மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி - போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!
Nov 3, 2025, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Web Desk by Web Desk
Sep 14, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னைச் சூளைமேடு பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

மழைக்காலங்களில் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிடுவது வழக்கம். சாலைகளில் நீர் தேங்கியும், தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்தும் மக்களைப் படாத பாடு படுத்தி விடும்.

குறிப்பாக, சூளைமேடு பகுதி மழைக் காலங்களில் அதிகப் பாதிப்பை சந்திக்கிறது. இதனைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மந்த கதியால் அப்பணி நடைபெறுவதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சூளைமேட்டில் உள்ள அண்ணா நெடும்பாதை, பஜனைகோயில் தெரு, வடஅகரம் சாலை, பெரியார் பாதை உட்பட பல இடங்களில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தொடர்பாக முறையான முன்னறிவிப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும், அதிகாரிகள் திடீரெனச் சாலையை தோண்டி போட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஜனைக் கோயில் தெரு பகுதியில் மழைநீர் வடிகால் பணி தொடங்கப்பட்டது. இதன் காரணமாக அந்தச் சாலை முழுவதுமாக மூடப்பட்டதால், பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஒருகட்டத்தில் மக்களின் கோபம் எல்லையைக் கடக்கவே, அவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பஜனைக் கோயில் தெருவில் மக்கள் பயணிக்கச் சிறிய வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

மழைநீர் வடிகால் பணியால் அண்ணா நெடும்பாதை ஏற்கனவே சுருங்கிவிட்டது. இந்நிலையில், பிற பகுதிகளில் சாலை அடைக்கப்பட்டதால் அவ்வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்களும் அண்ணா நெடும்பாதையிலேயே பயணிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஒருபுறம் தோண்டி போடப்பட்டுள்ள குழிகள் மற்றும் அடைக்கப்பட்ட சாலைகள். மறுபுறம் விழி பிதுங்க வைக்கும் போக்குவரத்து நெரிசல். இதனால், சென்னைச் சூளைமேடு பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Stormwater drainage work at a slow pace - people are suffering due to traffic congestion!மந்த கதியில் மழைநீர் வடிகால் பணிவிழி பிதுங்கும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

Next Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

Related News

திமுக ஆட்சியில் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்

சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

தருமபுரம் ஆதீன மடாதிபதி மணிவிழா மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி!

நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – அண்ணாமலை வாழ்த்து!

பாரத தேச வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் – இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நயினார் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

சமையல் பாரம்பரிய யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் பட்டியலில் லக்னோ!

ஆப்கனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் பலி!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முன்னேற்றம் அடைந்து வருகிறது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட MS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் – பிரதமர் மோடி வாழ்த்து!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து!

ஷபாலி வர்மா, தீப்தி சர்மா அபாரம் – உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

மகனை பிரதமராக்கும் சோனியாவின் கனவு ஈடேறாது – மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies