மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி - போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!
Jan 14, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னைச் சூளைமேடு பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

மழைக்காலங்களில் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிடுவது வழக்கம். சாலைகளில் நீர் தேங்கியும், தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்தும் மக்களைப் படாத பாடு படுத்தி விடும்.

குறிப்பாக, சூளைமேடு பகுதி மழைக் காலங்களில் அதிகப் பாதிப்பை சந்திக்கிறது. இதனைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மந்த கதியால் அப்பணி நடைபெறுவதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சூளைமேட்டில் உள்ள அண்ணா நெடும்பாதை, பஜனைகோயில் தெரு, வடஅகரம் சாலை, பெரியார் பாதை உட்பட பல இடங்களில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தொடர்பாக முறையான முன்னறிவிப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும், அதிகாரிகள் திடீரெனச் சாலையை தோண்டி போட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஜனைக் கோயில் தெரு பகுதியில் மழைநீர் வடிகால் பணி தொடங்கப்பட்டது. இதன் காரணமாக அந்தச் சாலை முழுவதுமாக மூடப்பட்டதால், பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஒருகட்டத்தில் மக்களின் கோபம் எல்லையைக் கடக்கவே, அவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பஜனைக் கோயில் தெருவில் மக்கள் பயணிக்கச் சிறிய வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

மழைநீர் வடிகால் பணியால் அண்ணா நெடும்பாதை ஏற்கனவே சுருங்கிவிட்டது. இந்நிலையில், பிற பகுதிகளில் சாலை அடைக்கப்பட்டதால் அவ்வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்களும் அண்ணா நெடும்பாதையிலேயே பயணிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஒருபுறம் தோண்டி போடப்பட்டுள்ள குழிகள் மற்றும் அடைக்கப்பட்ட சாலைகள். மறுபுறம் விழி பிதுங்க வைக்கும் போக்குவரத்து நெரிசல். இதனால், சென்னைச் சூளைமேடு பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Stormwater drainage work at a slow pace - people are suffering due to traffic congestion!மந்த கதியில் மழைநீர் வடிகால் பணிவிழி பிதுங்கும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

Next Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies