மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி - போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னைச் சூளைமேடு பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

மழைக்காலங்களில் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிடுவது வழக்கம். சாலைகளில் நீர் தேங்கியும், தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்தும் மக்களைப் படாத பாடு படுத்தி விடும்.

குறிப்பாக, சூளைமேடு பகுதி மழைக் காலங்களில் அதிகப் பாதிப்பை சந்திக்கிறது. இதனைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மந்த கதியால் அப்பணி நடைபெறுவதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சூளைமேட்டில் உள்ள அண்ணா நெடும்பாதை, பஜனைகோயில் தெரு, வடஅகரம் சாலை, பெரியார் பாதை உட்பட பல இடங்களில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தொடர்பாக முறையான முன்னறிவிப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும், அதிகாரிகள் திடீரெனச் சாலையை தோண்டி போட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஜனைக் கோயில் தெரு பகுதியில் மழைநீர் வடிகால் பணி தொடங்கப்பட்டது. இதன் காரணமாக அந்தச் சாலை முழுவதுமாக மூடப்பட்டதால், பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஒருகட்டத்தில் மக்களின் கோபம் எல்லையைக் கடக்கவே, அவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பஜனைக் கோயில் தெருவில் மக்கள் பயணிக்கச் சிறிய வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

மழைநீர் வடிகால் பணியால் அண்ணா நெடும்பாதை ஏற்கனவே சுருங்கிவிட்டது. இந்நிலையில், பிற பகுதிகளில் சாலை அடைக்கப்பட்டதால் அவ்வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்களும் அண்ணா நெடும்பாதையிலேயே பயணிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஒருபுறம் தோண்டி போடப்பட்டுள்ள குழிகள் மற்றும் அடைக்கப்பட்ட சாலைகள். மறுபுறம் விழி பிதுங்க வைக்கும் போக்குவரத்து நெரிசல். இதனால், சென்னைச் சூளைமேடு பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Stormwater drainage work at a slow pace - people are suffering due to traffic congestion!மந்த கதியில் மழைநீர் வடிகால் பணிவிழி பிதுங்கும் மக்கள்
Share
Tweet
SendShare
Previous Post

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

Next Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies