லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு "செக்"!
Mar 15, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், கிழக்கு லடாக்கில் அதிநவீனக் கண்காணிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட எல்லைப் பகுதி உள்ளது. எல்லையில் இருக்கும் பல பகுதிகளை இரு நாடுகளுமே தங்கள் பகுதி எனச் சொந்தம் கொண்டாடுகின்றன.

கடல் மட்டத்தில் இருந்து 4,350 மீட்டர் உயரத்தில் உள்ள பாங்காங் ஏரி மற்றும் கல்வான் நதி பாயும் பகுதிகளில் எல்லை இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகில் வாழும் பெரும்பாலான நாடோடி மக்களுக்கு கால்நடைகளே வாழ்வாதாரமாக உள்ளது.

பனிப் பாலைவனம் என்று கூறப்படும் லடாக் பகுதியில், சாதாரண நாட்களிலேயே கால்நடைகளை மேய்க்கப் புல்வெளி தேடுவது சிரமம். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் இந்தப் புல்வெளியை கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றி கொண்டே உள்ளனர்.

முன்பெல்லாம் அங்குலம் அங்குலமாக, ஒவ்வொரு அடியாகக் கைப்பற்றிவந்த சீனர்கள்,இப்போது கிலோமீட்டர்க் கணக்கில் கைப்பற்ற தொடங்கியுள்ளனர். தங்கள் கால்நடைகள் மேய்வதற்கான புல்வெளி சுருங்கிக் கொண்டே போகிறது என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், எப்போதெல்லாம் இந்தப் பகுதியில் தங்களுக்குப் பிரச்னைப் பதற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்திய ராணுவமே முன்னின்று பாதுகாப்பு தருகிறது என்றும் லடாக் மக்கள் கூறுகின்றனர்.

பொதுவாக இந்திய- திபெத் எல்லைக் காவல் படையினரே ரோந்து பணியில் ஈடு பட்டுவந்தனர். கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ல் நடந்த மோதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே சுமார் 60,000 வீரர்கள் நிறுத்த பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பழைய ரோந்துப் பணிகளுக்குப் பதிலாக, இந்தியா தனது எல்லையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் அதிநவீனக் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் பிற நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளது. இது எல்லையில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கண்காணிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு (ISR) நெட்வொர்க்கை உருவாக்கக் கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா பல கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இது ரோந்துப் பணிகளைக் குறிப்பதல்ல என்றும், மாறாக ரோந்துப் பணிகளை ஒருங்கிணைக்கும் என்றும் கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை எல்லையில் நிறுத்த வேண்டிய தேவைக் குறையும் என்றும், இதனால் தேவையற்ற பதற்றங்கள் மற்றும் தற்செயலான மோதல்கள் தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு இருநாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லைப் பகுதியில் பெரும்பாலும் அமைதி நிலவுகிறது என்பதை இருநாடுகளும் ஒப்புக்கொள்கின்றன. இதுவரை, இரு நாடுகளும் எல்லைப் பிரச்சினையில் 21 சுற்று படைத் தளபதிகள் மட்ட பேச்சுவார்த்தைகளையும், 34 சுற்று WMCC கூட்டங்களையும், 24 சுற்று சிறப்பு பிரதிநிதிகளின் உரையாடலையும் நடத்தியுள்ளன.

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில், ராணுவ மற்றும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், தொழில்நுட்பம் மூலம் பதற்றத்தைக் குறைக்கும் இந்தியாவின் புதிய அணுகுமுறைச் சர்வதேச அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே அமைதியையும், எல்லையில் ஸ்திர தன்மையையும் ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: அதிநவீன கண்காணிப்புindian armyNew twist on the Ladakh border: "Check" on China through sophisticated surveillanceலடாக் எல்லை
ShareTweetSendShare
Previous Post

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

Next Post

பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies