பஞ்சாப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பெய்த தொடர்க் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், ரூபாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.