உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் போலாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்று சாதனைப் படைத்தார்.
உலக குத்துச்சண்டைச் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்புல் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, போலந்தின் ஜூலியா ஸெரெமெட்டாவை எதிர்கொண்டார்.
இதில் ஜாஸ்மின், 4க்கு 1 என்ற கணக்கில் ஜூலியா ஸெரெமெட்டாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.