வேலூரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயிலில் துவங்கிய ஊர்வலம் அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் திருக்கோயில் வரை நடைபெற்றது.
மேளத் தாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர். மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.