பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு - 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!
Sep 16, 2025, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் நடத்திய பிரமாண்ட பேரணியால் லண்டன் மாநகரமே அதிர்ந்து போனது. வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராக எதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடியேறிகளால் ஐரோப்பா முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது. அந்த வகையில், தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் நடைபெற்ற பேரணியால் லண்டன் மாநகரமே குலுங்கியது.

லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை நடைபெற்ற மாபெரும் பேரணியில், சுமார் ஒன்றரை லட்சம் பேர்க் கலந்து கொள்ளத் திரும்பும் திசையெல்லாம் மனிதத் தலைகளாக காணப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், தேசத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கமிட அசாதரண சூழல் காணப்பட்டது.

டாமி ராபின்சனின் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பாசிசத்துக்கு எதிரான பேரணி என்ற பெயரில் இனவெறிக்கு எதிரானவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க, அது போலீசாருக்குப் பெரும் தலைவலியாக மாறியது. எங்கள் நாட்டில் வந்து எங்களுக்கு எதிராகவே பேரணியா? என டாமி ராபின்சன் ஆதரவாளர்கள் கொந்தளிக்க நிலைமை கை மீறி போனது. ஒரு கட்டத்தில் டாமி ராபின்சன் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களை நெருங்கி விட, அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர்.

ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த வலதுசாரி ஆதரவாளர்கள் போலீசார் மீதே தாக்குதல் நடத்த கலவரம் வெடித்தது. டாமி ராபின்சன் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 26 பேர் காயமடைந்துவிட, அமைதிக்குக் குந்தகம் விளைவித்தாக 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே போராட்டக்காரர்களுடன் ஆன்லைனில் பேசிய எலான் மஸ்க், பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும், புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனப் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கட்டுப்பாடற்ற புலம்பெயர்வு பிரிட்டனை அழித்துவிடும் என எலான் மஸ்க் எச்சரிக்க, விவகாரம் பூதாகரமாகி உள்ளது.

சமீப காலமாகவே, உலக நாடுகளில், ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி, ஆட்சி மாற்றம் ஆகியவைத் தொடர் கதையாகி உள்ளன. சமீபத்தில், GEN-Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் நேபாளத்தில் சர்மா ஒலி அரசாங்கம் கவிழ்ந்தது. அதே போன்றதொரு எழுச்சி போராட்டம் பிரிட்டனிலும் கிளம்பி இருக்க, பிரச்னையை அந்நாட்டு அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags: LondonAnti-immigrant protests intensify in Britain - London rocked by rally attended by 15thousands people!லண்டன் மாநகரம்
ShareTweetSendShare
Previous Post

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்கு பெரும் வரவேற்பு – செங்கோட்டையன்

Related News

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies