கோவை மாவட்டம், இருகூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஒன்றரை வயது குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருகூர் ராவுத்தூர் தரைப்பாலம் அருகே தண்டவாளத்தில் ஆண் குழந்தை சடலமாக கிடந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த வந்த ரயில்வே போலீசார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் உடல் அருகே மஞ்சள், குங்குமம், வெட்டப்பட்ட கோழியின் உடல் ரத்தம் கிடந்ததால் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றது. இருப்பினும், ஒன்றரை வயது குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.