தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சிமெண்ட் தூண் உடைந்து விழுந்ததில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் 4 வயது சிறுமி வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகச் சிமெண்ட் தூண் உடைந்து சிறுமி மீது விழந்தது. இதில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.